Tuesday, January 01, 2008

புத்தாண்டு ஆசை !!!

உலகம் மதிக்கும் உயர்ந்த மனிதனாய்,
அனைவரும் வியக்கும் அதிசய மனிதனாய்,
உலகம் என்னை உதாரணம் சொல்லவும்,
உண்மையாய் எனக்கு எண்ணம் இல்லை !

சுருக்கமாய் சொல்கிறேன் - நானொரு சுயனலக்காரன்.
ஆம்,
அன்னை மடியில், அப்பாவின் பிடியில்,
தோல்விகள் என்னை தொடும் போதெல்லாம்,
மழைக்கு குடையாய், என் மனத்திற்கு விடையாய் அண்ணனும்,
எனக்கே என்னை அறிமுகம் செய்து,
எனக்காய் வாழும் என்னவளோடும்,

இப்படி இவர்களோடு வரும் ஆண்டு மட்டுமல்ல,
நான் வாழும் ஆண்டு மட்டும் வாழவேண்டும் !!!

1 comment:

INJEY! said...

Manasa kasaki pulinchuta po!

You have been tagged!
http://injeytoday.blogspot.com/2008/01/new-year-once-again.html

Happy New Year!