Sunday, September 20, 2009

அவள்...?

பழக எளியவள்,
நளினம் அவள் உடல்...

வன்மையும் மென்மையும் கொண்டவள்,
இடையோ ஆறு...
அவளை போற்றுவதே எனக்கு பேறு !

அவளை ரசித்தவர் நூறாயிரம்,
அதனால் பலர் வடித்தனர் பா ஆயிரம் !

மொத்தத்தில் அவள் ஓர் இனிமை,
அவளை பாடுவதே எனக்கு பெருமை...

என்னுள் நிறைந்தவள்...
என்னை ஈர்த்வள்...
தமிழர் அறிந்தவள்...

அவளே...

என் "தமிழ்த்திருமகள்"