விடியலை சந்தித்திரா விளக்கு பூச்சிகள்
இரவில் சிறகு விரிக்க தவறியதில்லை
மண்ணுக்குள் புதைக்கப்பட்டாலும்
விதைகள் விருட்சங்களை விளைவிக்க மறப்பதில்லை
இளைத்தாலும் ஆண் சிங்கம்
இளநரிக்கு வால் பிடிப்பதில்லை
சுட்டாலும் சங்குகளின் சாயம் சாவதில்லை
நண்பா தெரிந்துகொள்
தோல்விகளை கண்டிராத மனிதன்
சரித்திரம் படைப்பபதில்லை !
நம்பிக்கையை நரம்பொடு பின்னிய ஒருவன்
தன்மானம் இழப்பதில்லை !!!
Written on 5-May-2004.
Tuesday, November 02, 2010
நம்பிக்கை
Posted by
All Dimensions
at
6:24 pm
2
comments
Labels: kavithai
Sunday, September 20, 2009
அவள்...?
பழக எளியவள்,
நளினம் அவள் உடல்...
வன்மையும் மென்மையும் கொண்டவள்,
இடையோ ஆறு...
அவளை போற்றுவதே எனக்கு பேறு !
அவளை ரசித்தவர் நூறாயிரம்,
அதனால் பலர் வடித்தனர் பா ஆயிரம் !
மொத்தத்தில் அவள் ஓர் இனிமை,
அவளை பாடுவதே எனக்கு பெருமை...
என்னுள் நிறைந்தவள்...
என்னை ஈர்த்வள்...
தமிழர் அறிந்தவள்...
அவளே...
என் "தமிழ்த்திருமகள்"
Posted by
All Dimensions
at
3:30 pm
0
comments
Labels: kavithai
Monday, March 02, 2009
தனிமை
உன் நினைவுகள் என்னை நெருங்கும் போது,
கற்பனை குதிரை கட்டவிழுந்து ஓடும்,
கவிதைகளால் பல காகிதம் நிறையும்,
கனவுகளால் எந்தன் இரவுகள் கழியும்!
எத்தனை நாள் இப்படியே கற்பனையில் கழிக்க!
என்று வந்து என் கண்ணீரை உன் காலடியில் தெலிக்க!
என் மனமும் எப்போதும் உன்னையே நினைக்க.
உன்னை விட்டு ஏன் வந்தேன்
இங்கு நான் தனிமையில் தவிக்க?
Posted by
All Dimensions
at
4:25 pm
3
comments
Labels: kavithai
Sunday, December 21, 2008
அன்னை
முதன்முதலில் நான் அழுகையில்
அவள் சிரித்தாள்,
என் வாழ்வில் நான் அழுகையில்
அவள் சிரித்த ஒரே நாள்!
அன்று நான் பிறந்தநாள் ! ! !
Posted by
All Dimensions
at
4:32 pm
0
comments
Labels: kavithai
Tuesday, January 01, 2008
புத்தாண்டு ஆசை !!!
அனைவரும் வியக்கும் அதிசய மனிதனாய்,
உலகம் என்னை உதாரணம் சொல்லவும்,
உண்மையாய் எனக்கு எண்ணம் இல்லை !
சுருக்கமாய் சொல்கிறேன் - நானொரு சுயனலக்காரன்.
ஆம்,
அன்னை மடியில், அப்பாவின் பிடியில்,
தோல்விகள் என்னை தொடும் போதெல்லாம்,
மழைக்கு குடையாய், என் மனத்திற்கு விடையாய் அண்ணனும்,
எனக்கே என்னை அறிமுகம் செய்து,
எனக்காய் வாழும் என்னவளோடும்,
இப்படி இவர்களோடு வரும் ஆண்டு மட்டுமல்ல,
நான் வாழும் ஆண்டு மட்டும் வாழவேண்டும் !!!
Posted by
All Dimensions
at
3:12 am
1 comments
Labels: kavithai
Wednesday, September 19, 2007
College Kavithai - Part 2
Posted by
All Dimensions
at
11:15 pm
2
comments
Labels: kavithai
Wednesday, September 12, 2007
My First College Kavithai
Posted by
All Dimensions
at
2:49 am
3
comments
Labels: kavithai


